பிரபல ஹிந்தி சின்னத்திரை நடிகர் தற்கொலை?

ஹிந்தி சேனல்களில் தொடர்ச்சியாக நடித்து வந்த இளம் நடிகர் கரண் பரபஞ்சே. 26 வயதே ஆன கரண் “தில் மில் கயி” என்ற தொடரில் நோயாளிகளை அன்புடன் கவனித்துக் கொள்ளும் செவிலித் தந்தையாக நடித்து புகழ்பெற்றார்.

அந்த தொடரில் அவரது பெயர் ஜிக்னேஷ். ரசிகர்கள் அவரை அந்தப் பெயர் சொல்லியே அழைத்தார்கள். அந்த அளவிற்கு அந்த கேரக்டர் மக்களைச் சென்று சேர்ந்தது. அதன் பிறகு சஞ்சீவனம் உள்பட பல சீரியல்களில் நடித்து முன்னணி நடிகராக இருந்தார்.மும்பையில் வசித்து வந்த கரண் கடந்த சில நாட்களாக எந்த படப்பிடிப்புக்கும் வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த தயாரிப்பு நிர்வாகிகள், அவரது வீட்டு கதவை உடைத்து பார்த்தபோது தனது படுக்கை அறையில் இறந்து கிடந்தார்.

உடனடியாக போலீஸுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீஸார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். கரண் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Leave a Response