ஜனவரியில் விஜய் – முருகதாஸ் – அனிருத் இணையும் புதிய படம்??

2012-ல் மிக அதிக வசூல் செய்த படம் என்ற பெருமைக்குரிய படம் துப்பாக்கி. இந்தப் படத்தை கலைப்புலி தாணு தயாரித்திருந்தார். துப்பாக்கி படத்தைத் தொடர்ந்து மீண்டும் ஒரு படத்தில் முருகதாஸும் விஜய்யும் இணையபோவதாகவும், இந்தப் படம் வரும் ஜனவரி 2014-ல் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

விஜய் தலைவா படத்தை முடித்து ஜில்லா படத்திற்கு ஆயத்தமாகி வருகிறார். ஜில்லா வரும் அக்டோபரில் முடிந்துவிடும். முருகதாஸ் துப்பாக்கி இந்தி படத்தை இயக்கி வருகிறார். அதன் பிறகு ஜனவரி 2014-ல் இந்தப் படம் தொடங்கும். அஜீத்துக்காக உருவாக்கிய இரட்டை வேடக்கதையை தான் விஜய்யை வைத்து எடுக்கப் போகிறாராம் முருகதாஸ்.

மேலும் ஒரு கூடுதல் தகவலாக முருகதாஸ் இளம் இசையமைப்பாளர் அனிருத் உடன் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே முருகதாஸ் – ஹாரிஸ் ஜெயராஜ் வெற்றி கூட்டணி இந்த படத்தில் பிரிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.