சென்னையை அடுத்த காட்டான்குளத்தூர் பகுதியில் இயங்கி வருகிறது எஸ்ஆர்எம் குழும கல்லூரிகள். இந்தக் கல்லூரியில் வெளி மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் அதிகம் பயின்று வருகின்றனர்.
கல்லூரியில் செமஸ்டர் தேர்வு நடக்கிறது ,அப்போது தேர்வின் போது ஆந்திராவைச் சேர்ந்த மாணவன் மாஜஸ்டிசாய் நிக்கன் காப்பியடித்திருக்கிறார் இதனை கண்டுபிடித்த ஆசிரியர் மாணவன் மாஜஸ்டிசாய் நிக்கனை கண்டித்துள்ளனர். சக மாணவர்கள் முன்னிலையில் கண்டித்ததால் மாணவன்
மனமுடைந்துள்ளர்.இந்நிலையில், இன்று காலையில் விடுதியின் மாடியில் இருந்து குதித்து மாணவன் நிக்கன் உயிரிழந்துள்ளான். இச்சம்பவத்தை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.