மாணவர்களை பிரம்பால் அடித்த ஆசிரியருக்கு இடைக்கால பணிநீக்கம்!

IMG_20171210_234716
சென்னை புரசைவாகத்தில் உள்ள எம்.சி.டி.எம் மேல்நிலை பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு மாணவர்கள் பதினோர் பேரை, கணினி ஆசிரியர் வி.எஸ்.பாண்டியன் மற்ற மாணவர்கள் மத்தியில் பிரம்பால் அடித்துள்ளார்.

நவம்பர் 17, 2017 அன்று நடந்த இந்த பிரம்படி நிகழ்வு, அப்பள்ளி வகுப்பறையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. பெற்றோர்கள் சிலருக்கு இந்த சம்பவம் பற்றி தெரியவர, அவர்கள் பள்ளியின் நிர்வாகத்திடம் புகார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தை விசாரித்த பள்ளி நிர்வாகம் மாணவர்களை பிரம்பால் அடித்த கணினி ஆசிரியர் வி.எஸ்.பாண்டியனை இடைக்கால பணிநீக்கம் செய்துள்ளனர்.

Leave a Response