புலிகளுக்காக குரல் கொடுக்கும் “பனிவிழும் மலர்வனம்”!!

CTN – Combined Talented Network Productions தயாரிக்க ஜேம்ஸ் டேவிட் இயக்கும் படம் பனி விழும் மலர்வனம். அதன் பெயரைப் போலவே மனதை உறைய வைக்கப் போகும் படம். வீரசாகசங்களும் அற்புதங்களும் உள்ளடக்கிய காதலை இயற்கைதான் கதாநாயகன் என்கிற கருத்தினை முன்னிறுத்திச் சொல்லப்போகிற முதல் தமிழ்ப்படம். கேரளா, குமுளி மற்றும் தேக்கடியில் பார்ப்பவர் மனதைக் கொள்ளை கொள்ளும் இடங்களில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.

ரசிகர்களுக்குத் தரமான படைப்பினை வழங்கவேண்டும் என்பதற்காக காடு மலைகளில் ஏறி அட்டைப்பூச்சிகள், காடுமலைகளில் வாழும் விஷ ஜந்துக்கள் ஆகியவற்றினால், ஏற்படும் அபாயங்களைப் பொருட்படுத்தாது பனிவிழும் மலர்வனம் குழுவினர் பணியாற்றியிருக்கிறார்கள்.

நீதானே என் பொன்வசந்தம் படத்தில் நடித்த அபிலாஷ் கதாநாயகனாகவும், ஒருவர் மீது இருவர் சாய்ந்து படத்தில் நடித்த சானியா, பேராண்மை படத்தில் நடித்த வர்ஷா ஆகியோர் கதாநாயகிகளாகவும் நடித்துள்ளனர். இயக்குனர் ஜெகன்ஜியும் நகைச்சுவை நடிகர் பாபா லட்சுமணனும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இவர்களுடன் தமிழ்த் திரைப்பட உலகில் முதல்முறையாக ஒரு புலியும் படமுழுவதும் ஒரு கதாபாத்திரமாகவே வருகிறது. இந்தப்புலி  தி ஹேங் ஓவர், பர்னிங் பிரைட் மற்றும் வி பாட் அ ஜு போன்ற ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தத்தில் பனிவிழும் மலர்வனம் Incredible India விற்கான ஆவணப்படமாகவும் புலிகளைக் காப்பாற்றுவோம் என்கிற குரலுக்கு வலுசேர்க்கும் படமாகவும் இருக்கும்.

இப்படத்தில் உயிரோட்டமான பாடல்கள் இரண்டினை கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் பிரத்தியேகமாக எழுதிக்கொடுத்திருக்கிறார். அறிமுக இசையமைப்பாளரான ரஜின் அற்புதமான மெலடிகளைக் கொடுத்துள்ளார். ரஜினின் பனிவிழும் மலர்வனம் பாடல்கள் இன்று வெளியிடுப்படுன்றன. இத்திரைப்படம் பற்றிய மேலதிக தகவல்களை அறிவதற்காக http://pvmmovie.com என்ற இணையத்தளம் உருவாக்கப்பட்டிருக்கிறது.