தற்போதைய சூழலில் என்னுடைய வேட்புமனு நிராகரிக்கப்பட வாய்ப்புள்ளது.. அச்சத்தில் தீபா!

தற்போதைய சூழலில் தன்னுடைய வேட்புமனு நிராகரிக்கப்பட வாய்ப்புள்ளதாக தீபா தெரிவித்துள்ளார்.

ஆர்கே நகர் தொகுதிக்கு வரும் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள்.

இதற்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்ய 40க்கும் மேற்பட்ட சுயேட்சை வேட்பாளர்கள் குவிந்துள்ளனர். ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் விஷால் மற்றும் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா ஆகியோர் இன்று வேட்பு மனுத்தாக்கல் செய்கின்றனர்.

வேட்பு மனுத்தாக்கலுக்கான நேரம் முடிந்துள்ள நிலையில் விஷாலுக்கு 68வது நம்பர் டோக்கனும் தீபாவுக்கு 91வது டோக்கனும் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய தீபா, தற்போதைய சூழலில் தனது வேட்பு மனு நிராகரிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிட எந்த சின்னத்தை அளித்தாலும் ஏற்றுக்கொள்வேன் என்றும் தீபா தெரிவித்துள்ளார். வேட்புமனுத்தாக்கல் 91வது டோக்கனாக 91வது டோக்கன் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Response