யாருக்கு ‘தொப்பி?’: டிடிவி மனுவை தள்ளுபடி செய்தது டில்லி ஐகோர்ட்டு

77787358776bed8e3eaf14767cfadfd1

 

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடும் டிடிவி தினகரன், தனக்க தொப்பி சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என டில்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கில் இன்று காலை இறுதி கட்ட விசாரணை முடிந்து மாலையில் தீர்ப்பு கூறப்படும் என்ற அறிவித்த நிலையில்,, மாலை4 மணி அளவில், டிடிவியின் மனுவை தள்ளுபடி செய்து டில்லி உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆர்.கே.நகர் தேர்தலில் சுயேட்சையாக களமிறக்கும் டிடிவி தினகரன், தனக்கு தொப்பி சின்னம் வேண்டும் என்று தேர்தல் அலுவலரிடம் கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால், தொப்பி சின்னத்தை மேலும் இரண்டு சுயேட்சைகள் கேட்டிருப்பதாக கூறிய தேர்தல் அலுவலர், குலுக்கல் முறையில்தான் ஒதுக்க முடியும் என்று கூறிவிட்டார்.

இதன் காரணமாக, டில்லி உயர்நீதிமன்றத்தில் டிடிவி தினகரன் சார்பில் கடந்த 1ந்தேதி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இறுதி விசாரணை இன்று முற்பகல் நடைபெற்றது. இன்று காலை காரசாரமாக நடைபெற்ற விசாரணையை தொடர்ந்து பிற்பகல் 4 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என டில்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

அதன்படி இன்று மாலை 4 மணிக்கு இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது, டிடிவி தினகரன் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம், தொப்பி சின்னம் வழங்குவது குறித்து தேர்தல் ஆணையமே முடிவு செய்யும் என்றும் கூறியது.

இதன் காரணமாக டிடிவி தரப்பினர் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Leave a Response