பவர் ஸ்டாருக்கு மீண்டும் பிடிவாரண்டா!

power

திருச்சி மாவட்டம், துறையூரைச் சேர்ந்தவர் வரதராஜன். ரியல் எஸ்டேட் தொழில் அதிபர். இவருக்கு ரூ.10 கோடி கடன் வாங்கி தருவதாக நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கூறினார். இதற்கு ரூ.60 லட்சம் கமிஷன் பேசி, ரூ.30 லட்சத்தை 6 மாதங்களுக்கு முன் வரதராஜன் கொடுத்திருந்தார். ஆனால் சொன்னபடி கடன் வாங்கித் தரவில்லை.

இதையடுத்து ரூ.30 லட்சத்தை சீனிவாசன் திருப்பிக்கொடுத்தார். மீதி 30 லட்சத்துக்கு செக் கொடுத்திருந்தார். அந்த செக் வங்கியில் பணம் இல்லாமல் பவுன்சாகி திரும்பி விட்டது. பின்னர் வரதராஜன் துறையூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு துறையூர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

power-1

வழக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி சீனிவாசனுக்கு பலமுறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. இந்நிலையில் அவருக்கு நீதிபதி பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார்.

இதே வழக்கில் ஏற்கெனவே பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பவர் ஸ்டார் வெளியே வந்து சில படங்களில் நடித்தார். இதையடுத்து செக் மோசடி வழக்கை வரதாஜன் மீண்டும் தொடர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Response