3 மாவட்ட ஆட்சியர்களுடன் மழை பாதிப்பு குறித்து முதல்வர் ஆலோசனை!

cm 2
மழை பாதிப்பு குறித்து திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை ஆகிய 3 மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.

பருவ மழை பாதிப்புகள் தொடர்பாக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டம், தலைமைச் செயலகத்தில் நாமக்கல் கவிஞர் மாளிகையின் பத்தாவது தளத்தில் நடைபெறுகிறது.

தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், அனைத்துத் துறை செயலாளர்கள், சென்னை மாவட்ட ஆட்சியர் அன்புச் செல்வன், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி, காவல்துறை எஸ்.பி.க்கள், சென்னை மாநகராட்சியின் 15 மண்டல அதிகாரிகள், சென்னை காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன், மழை பாதிப்பு கண்காணிப்புப் பணிக்காக பணியமர்த்தப்பட்ட 6 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் உள்ளிட்டோர் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

பருவமழை தீவிரம் அடையும் நிலையில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாகவும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது.

Leave a Response