ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாளை பீகார் செல்கிறார்!

Tamil_News_large_1797922

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாளை பீகாருக்கு வருகைதர உள்ளார். பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள கோலம்பரில் முன்னாள் ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத் சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலைக்கு  ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.  பின்னர் பாட்னாவில் உள்ள ஜெயபிரகாஷ் நாராயணன் சிலைக்கும் மரியாதை செலுத்துகிறார்.

 

அதனை தொடர்ந்து பாட்னாவில் ஸ்மார்ட் அசோக் மாநாட்டில் கலந்துகொண்டு  பீகார் கிரிஷ் ரோடு மேப் 2017-2022  என்ற ஒன்றை தொடங்கி வைக்கிறார்.

     பீகார் கவர்னராக பதவி வகித்த ராம்நாத் கோவிந்த் பாஜக ஜனாதிபதி வேட்பளராக தேர்வு செய்யப்பட்டு  ஜனாதியாக உயர்ந்தது குறிப்பிடத்தக்கது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வருகையொட்டி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Leave a Response