125 கோடி மக்களுக்கும் துன்பத்தை உருவாக்கிய நாள் இன்று!-ஸ்டாலின்

22154213_866691656824039_2890031700349415073_n

பணமதிப்பு இழப்பு அறிவிப்பு நாள் கறுப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது என்று மதுரையில் நடக்கும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் மு.க.ஸ்டாலின் கூறினார். நவம்பர் 8ம் தேதி வேதனைகள் நிறைந்த நாள் என்று மு.க.ஸ்டாலின் கூறினார். 125 கோடி மக்களுக்கு துன்பத்தை உருவாக்கிய நாள் நவம்பர் 8 என்று அவர் தெரிவித்துள்ளார். நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி பதில் சொல்ல வேண்டிய நாள் வரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.  பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் கூலித்தொழிலாளிகள், நோயாளிகள், முதியவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர் எனவும் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

Leave a Response