சென்னையில் தொடர் மழை: இன்றும் யூனிவர்சிட்டி தேர்வுகள் ஒத்திவைப்பு…

AnnaUniversity_Liveday
வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளதால் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் அதிக அளவு மழைப்பொழிவு காணப்படுகிறது. கிராமப்புறங்களைவிட நகர்ப்புறங்களில் மழை நீர் அதிக அளவில் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

சென்னை டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம், சென்னை அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் சார்பில் நேற்று நடைபெற இருந்த தேர்வு ஒத்தி வைக்கப்பட்டது. இந்த தேர்வு
இன்று நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இன்றும் விட்டு விட்டு மழை பெய்து வருவதால் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் அறிவிப்பு வெளியிட்டு உள்ளனர்.

இந்நிலையில் இன்றும் மழை நீடிப்பதால் சென்னை பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெறவிருந்த அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. தரமணியில் உள்ள தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைகழகத்தில் சிறப்பு பள்ளியில் இன்று நடைபெற இருந்த தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுகளுக்கன மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும். அதேசமயம், அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் தெரிவித்துள்ளார்.

Leave a Response