திருவள்ளூரில் வெள்ளத்தில் சிக்கயவர்கள் மீட்பு!

thiruva

திருவள்ளூர் பெய்த கனமழையால் செங்குன்றம் அருகே குடியிருப்பு பகுதியை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளார். இதனை தொடர்ந்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டதையடுத்து ரப்பர் படகுகள் மூலம் வெள்ளத்தில் சிக்கியிருந்த 40 பேரை  மீட்டுள்ளனர்.

boat4

மேலும் செங்குன்றம் அருகே தாழ்வான பகுதியில் இருந்த 10 பேரும் மீட்கப்பட்டுளனர். மீட்கப்பட்ட 50 பேரும் அருகில் உள்ள தீர்த்தக்கறையான்பட்டி தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியர் சுந்தரவல்லி கூறியுள்ளார். மேலும் செங்குன்றம் பகுதியில் தேங்கியுள்ள மழை நீரை உடனடியாக அகற்றும் படி மாவட்ட நிர்வாகத்திற்கு ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதேபோல் அத்திப்பட்டு புதுநகர் பகுதியிலும் மழை நீர் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

Leave a Response