முன்னாள் எம்எல்ஏ குப்பன் திருவெற்றியூர் பகுதியில் ஆய்வு!

thiru1

சென்னை திருவொற்றியூர் அண்ணாமலை நகர், சாஸ்திரி நகர், கலைஞர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து இரவு முழுக்க சுமார் 10 மணி நேரம் பெய்த அடைமழையினால் தண்ணீர் வெளியேற வழியின்றி குடியிருப்புவாசிகள் வெளியே வர இயலாமல் தவிக்கின்றனர்.

அண்ணாமலைநகரில் வீடுகளில் தண்ணீர்புகுந்ததால் பெற்றோர்கள் தங்களது குழந்தைகள் மற்றும் மூட்டை முடிச்சுகளுடன் வீட்டை விட்டு வெளியேறி உறவினர்கள் வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

thiru

பாதிக்கப்பட்ட அப்பகுதிகளில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குப்பன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து குடியிருப்புவாசிகளிடம் குறைகளை கேட்டறிந்தார் .

Leave a Response