சமீபத்தில் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவை திருமணம் செய்து கொண்டு அக்னிநேனி குடும்பத்துக்கு மருமகள் ஆனவர். ஆனால் இதையெல்லாம் தாண்டி அவருக்கு இன்னொரு முகம் இருப்பது பலருக்கும் தெரியாது.
இவர் யாருக்கும் தெரியாமல் சமந்தா பிரதியுஷா என்கின்ற தொண்டு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த தொண்டு நிறுவனத்தின் மூலம் பல ஏழைக் குழந்தைகளுக்கு கல்வி மற்றும் மருத்துவ உதவியும் செய்துவந்துள்ளார் சமந்தா. இதுவரை விளம்பரப்படுத்தாமல், வெளியில் தெரியாமல் பல உதவிகளை செய்திருக்கிறார். தனது திருமணத்தையொட்டி பெரிய அளவில் ஒரு உதவி செய்ய வேண்டும் என்று விரும்பினார் சமந்தா. அதன் அடிப்படையில் சில தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் உடனடியாக இருதய ஆபரேஷன் செய்ய வேண்டிய நிலையில் இருக்கும் 15 குழந்தைகளை தேர்வு செய்து அவர்களுக்கு உடனடியாக ஆபரேஷன் செய்து வைத்தார்.
அதற்கான முழு செலவு தொகையையும் சமந்தாவே செலுத்தி உள்ளார். இந்த அரவை சிகிச்சையின் செலவு சுமார் ஒரு கோடி வரையில் இருக்கும் என்கிறார்கள். இதுகுறித்து சமந்தா தனது டுவிட்டர் பக்கத்தில் “அழகான 15 குழந்தைகளும் இப்போது ஆரோக்கியத்துடன் நலமாக இருக்கிறார்கள். நான் இந்த உதவியை செய்ய உதவிய கடவுளுக்கு நன்றி” என்று குறிப்பிட்டிருக்கிறார்.