கரையைத் தாண்டி குடியிருப்புகள் வரை வந்து செல்லும் கடல் அலைகள்!

ma

காஞ்சிபுரம் மாவட்டத்தின் கடலோரப் பகுதிகளில் ஒன்றாக விளங்கும் மாமல்லபுரத்தில், வடகிழக்குப் பருவமழை தீவிரத்தால் கனமழை பெய்து வருகிறது. இதனால், பல்வேறு இடங்களில் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. பேரூராட்சி நிர்வாகத்தினர் சாலையோரங்களில் தற்காலிக கால்வாய்களை அமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், பலத்த காற்று வீசுவதால் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. சுமார் 10 முதல் 20 அடி உயரத்துக்கு மேலெழும்பி ஆர்ப்பரித்து வரும் ராட்சத அலைகள், கரையைத் தாண்டி குடியிருப்புகள் வரை வந்து செல்கின்றன.

makapali

இதனால், கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீன்பிடிப் படகுகள் சேதமடைந்துள்ளன. மேலும், கரையைத் தாண்டி வரும் அலைகளால் குடியிருப்புகள் சேதமடையும் நிலையும் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை.

Leave a Response