உடனே செயல்பட்டால் தான் வரும் முன் காப்பதாகும்; கமல் ட்விட்….

kam_08072
உடனே செயல்பட்டால் வரும் முன் காப்பதாகும் என நடிகர் கமல் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இது குறித்த அவர் பதிவிட்டிருப்பதாவது:-

சென்னையின் தென் மேற்கு வடமேற்கு பகுதிகள் நீரில் மூழ்க தயாராகி கொண்டிருக்கின்றன. இது அரசுக்கும் மக்களுக்கும் கொடுக்கப்படும் முன்னறிவிப்பு. சேலையூர் ஏரி, கூடுவாஞ்சேரி நந்திவரம் பெல்ட் ஏரி சிட்லபாக்கம் ஏரி, நாராயணபுரம் எரி, முடிச்சூர் எரிகள் நிரம்பி வழிய அதிக நேரமாகாது. நீர் நிலை ஆர்வலர்களுக்கோ, மக்களுக்கோ இந்த ஏரிகளின் கொள்ளளவு பற்றி தெரியாது, நீர் வரத்துப்பாதைகளும் தெரியாது.

இவை அனைத்தும் தெரியாது என்பதை விட நில அபகரிப்புக்கு வசதியாய் தெரியாமல் வைக்கப்பட்டிருக்கிறது என்பதே உண்மை. நன்மங்கலத்தில் இருந்து மற்றொரு ஏரிக்கு நீர் வரும் பாதைய மறைத்து கட்டப்பட்ட கட்டடத்தை இடிக்க நீதிமன்றம் கடந்த 2015ல் உத்தரவு பிறப்பித்து விட்டது. எனினும் இன்றுவரை சட்டம் மீறப்பட்டே வருகிறது. அப்பகுதிகளில் வாழும் மக்கள் விழிப்புடன் இருக்கவும், குரலெழுப்பவும் ஊடகங்கள் உதவ வேண்டும். வரும்முன் காப்போம் இவ்வாறு நடிகர் கமல் பதிவிட்டுள்ளார்.

Leave a Response