தலைமை நீதிபதி அமர்வுக்கு ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் வழக்கு மாற்றம் !

Madras-High-Court-LL-Size-min
ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் திமுக சார்பில் போட்டியிட்ட மருதுகணேஷ் தொடர்ந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு எதிராக தி.மு.கவின் மருதுகணேஷ், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா புகாரில் வருமான வரித்துறையினர் வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுக்கும் வரை தேர்தல் தேதி அறிவிக்கக்கூடாது என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ரவிசந்திரபாவு இது தேர்தல் வழக்கு என்பதால் தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
மேலும், இதனை தலைமை நீதிபதி அமர்வு விசாரிக்கும் வரை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தொடர்பாக எவ்வித அறிவிப்பும் தேர்தல் ஆணையம் வெளியிடாது என தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Response