மூத்த வீரர்களின் அறிவுரையை ஏற்காத கோலி..!அதுவே இந்திய அணிக்கு பலமானது : சச்சின் புகழாரம்

508bd9c7-d9e7-47c5-becd-0c052e9800bf

விராட் கோலியின் ஆக்ரோஷமான ஆட்டமே இந்திய அணியின் பலமாக மாறிவிட்டதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் கூறியுள்ளார். மும்பையில் ஒரு தனியார் ஹோட்டலில் ‘டெமாக்ரசி 11- தி கிரேட் இந்தியன் கிரிக்கெட் ஸ்டோரி’ என்ற கிரிக்கெட் பற்றிய புத்தகம் வெளியிடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய டெண்டுல்கர், 2008-ம் ஆண்டு ஒருநாள் போட்டியில் விராட் கோலி அறிமுகமான போது அவர் கண்களில் ஒரு தீ தெரிந்ததாகவும், அது முதலே அவர் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதையும் நினைவு கூர்ந்தார்.

ஆனால் அப்போது அணியில் இருந்த மூத்த வீரர்கள் விராட்டிடம் ஆக்ரோஷத்தை குறைத்துக் கொள்ள அறிவுறுத்தினர். இதனை பொருட்படுத்தாத விராட் கோலி, அதுவே தற்போது இந்திய அணியின் பலமாக மாறிவிட்டதாகவும் சச்சின் குறிப்பிட்டார். விராட்டிடம் மிகவும் விடாப்பிடியான குணம் உள்ளது. அதுதான் அவரது வெற்றியின் ரகசியம். அவர் தனது ஆக்ரோஷத்தை அணியில் இருக்கும் மற்ற அனைத்து வீரர்களுக்கும் கடத்துகிறார். அதுதான் இந்திய அணியின் வெற்றிக்கான ரகசியம் என்றும் சச்சின் குறிப்பிட்டார்.

Leave a Response