ஜெ.மரணம்: நீதிபதி விசாரணை இன்று தொடக்கம்?

 j

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையத்தை அமைத்து தமிழக அரசு கடந்த மாதம் 25-ம் தேதி அறிவித்தது. சென்னை சேப்பாக்கம் எழிலக வளாகத்தில் உள்ள கலச மஹாலில் நீதிபதி ஆறுமுகசாமிக்கு அலுவலகம் அமைக்கப்பட்டது. கடந்த 30-ம் தேதி காலை அந்த அலுவலகத்துக்கு சென்ற நீதிபதி ஆறுமுகசாமி, விசாரணை அறை எப்படி இருக்க வேண்டும் என்று சில ஆலோசனைகளை கூறினார்.

அதைத் தொடர்ந்து நீதிபதி ஆறுமுகசாமி 25-ம் தேதி (இன்று) விசாரணையை தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாயின. ஆனால், அதுபற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் நேற்றுவரை வெளியாகவில்லை. இருப்பினும் அவர் தனது விசாரணையை இன்று தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Response