திராவிட முன்னேற்ற கழகத்தின் திருவண்ணாமலை மாவட்ட செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான எ.வ.வேலு அவர்கள் ஆணையின்படி திருவண்ணாமலை நகராட்சியில் 33’வது வார்டில் நிலவேம்பு கஷாயம் வழங்கப்பட்டது.
திருவண்ணாமலை நகராட்சி 33’வது வார்டில் அமைந்துள்ள D.M.பள்ளி மாணவர்களுக்கும், கால்நகர் பொதுமக்களுக்கும் மற்றும் சோனாங்குட்டை பகுதி மக்களுக்கு டெங்கு காய்ச்சலில்லிருந்து பாதுகாக்கும் விதமாக நிலவேம்பு கஷாயம் இன்று(24 அக்டோபர் 2017) வழங்கப்பட்டது. இந்த நிலவேம்பு கஷாயம் வழங்கும் நிகழ்வினை தி.மு.க கட்சி சார்பில் 33’வது வார்டு முன்னாள் கவுன்சிலரும், மாவட்ட கழக துணை அமைப்பாளருமான A.K.ரத்தினக்குமார் முன்னின்று வழங்கிவந்தார்.