மோடியைத் திருமணம் செய்யவேண்டி, ஜந்தர் மந்தரில் பெண் போராட்டம்

 

பிரதமர் மோடியைத் திருமணம் செய்ய வேண்டி டெல்லி, ஜந்தர் மந்தரில் பெண் ஒருவர் போராட்டம் நடத்திவருகிறார்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த ஓம் சாந்தி சர்மா (வயது 40) என்பவர்தான் இந்த விசித்திரப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். மோடியின் புகைப்படத்துடன் அவர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறார்.

modi__10161

பிரதமர் மோடி யைத் திருமணம் செய்வதுகுறித்து சாந்தி கூறுகையில், ”எனது முதல் திருமணம் முறிவைச் சந்தித்தது. அதற்குப் பிறகு, என்னைத் திருமணம் செய்ய ஏராளமானோர் முன்வந்தனர். தற்போது, பிரதமர் மோடியைத் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன். பிரதமர் தனியாக இருக்கிறார். அவருக்கு நான் சேவை செய்ய விரும்புகிறேன். அவரைச் சந்திக்க எனக்கு அனுமதி தர மறுக்கின்றனர். நான் ஏதோ பேராசைப்படுவதாக  மக்கள் என்னைப் பார்த்து சிரிக்கின்றனர். எனக்கு ஏராளமான நில புலன்கள் இருக்கின்றன. அதையெல்லாம் விற்று, மோடியை நான் பார்த்துக்கொள்வேன். பிரதமர் என்னை வந்து சந்திக்கும் வரை ஜர்ந்த மந்தரில்  போராட்டம் தொடரும் ”என்கிறார்.

சாந்திக்கு முதல் திருமணம் வழியாக 20 வயதில் மகள் உள்ளார். டெல்லியில், குருத்வாரா கோயில்களுக்குச் சென்று சாப்பிட்டுக் கொள்கிறார். பொதுக் கழிவறையைப் பயன்படுத்திக்கொண்டு, செப்டம்பர் 8-ம் தேதியிலிருந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். பத்திரிகையாளர் ஒருவர் ஏதேச்சையாக பேச்சுக்கொடுத்தபோதுதான் உண்மை வெளிவந்திருக்கிறது.

Leave a Response