ஜெ மரணம் குறித்து எதை வெளியிட்டாலும் வழக்கு தொடர்வது உறுதி- தீபா

diipa

பத்மஸ்ரீ விருதுபெற்ற பா.சிவந்தி ஆதித்தனாரின் 82-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது.

போயஸ் தோட்ட நினைவு இல்லத்தில் பா.சிவந்தி ஆதித்தனாரின் உருவப் படத்திற்கு தினத்தந்தி நிர்வாக இயக்குனர் & குடும்பத்தினர் மற்றும் பல்வேறு அரசியல் தலைவர்கள் மலர்தூவி மரியாதை செய்தனர். எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை சார்பில் சிவந்தி ஆதித்தனாருக்கு மரியாதை செலுத்தினார் தீபா.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற படத்தை வெளியிடுவோம் என கூறுபவர்கள் இத்தனை நாளாக என்ன செய்தனர் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Jayalalithaa

மேலும் ஜெயலலிதா மரணம் குறித்த ஆழமான சந்தேகத்தை நிரூபணமாக்கியுள்ளனர். ஜெயலலிதா சிகிச்சை பெற்ற படங்களை வெளியிட்டாலும் வெளியிடாவிட்டாலும் வழக்கு தொடர்வது உறுதி என்று கூறியுள்ளார்.

Leave a Response