இரவில் ‘எடக்கு’ செய்த விஜய் சேதுபதி!

vijay se

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தன் நடிப்புத் திறமைக்கு சவால் விடும்படியான படம் ஒன்று அமைந்து நடித்துக் கொண்டிருக்கிறார். படத்தின் பெயர் ‘எடக்கு.’

நிமோ ப்ரொடக்‌ஷன்ஸ் சார்பில் K.பாலு இப்படத்தை தயாரித்திருக்கிறார். கதை, திரைக்கதை, இயக்கம் S.சிவன்.

இது ஒரு நாள் இரவில் நடக்கும் சம்பவத்தை மையமாக கொண்டு உருவாகிக் கொண்டிருக்கும் இந்த படத்தில் இதுவரை ஏற்காத கதாபாத்திரத்தில், வித்தியாசமான தோற்றத்தில் விஜய் சேதுபதி மிரட்டியிருப்பதாக சொல்லப்படுகிறது!

சண்டைப் பயிற்சியாளர் தவசிராஜ் கடினமாக உழைத்து வடிவமைத்திருக்கிற இந்த படத்தின் விறுவிறு சண்டைக் காட்சிகள் பேசப்படக் கூடியதாக இருக்கும் என்கிறது படக்குழு

இப்படத்தின் படப்பிடிப்பு சேலம், தர்மபுரி, பெங்களூரு ஹைவேக்களிலும் அதைச் சுற்றிய ஊர்களிலும் நடந்துள்ளது. மிக விரைவில் ரசிகர்களை மகிழ்விக்க வருகிறது ‘எடக்கு’.

Leave a Response