பான் கார்டு – ஆதார் கார்டு இணைப்பு; காலக்கெடு நீட்டிப்பு!

aathar

இந்தியாவின் அடையாளமே ஆதார் என்ற நிலைப்பாடு தான் தற்போது உருவாகி உள்ளது. அந்த வகையில் ஒரு தனி மனிதனின் அடையாளமாக ஆதார் விளங்குகிறது.

இதற்கு முன்னதாக, தனிநபர் ரகசியம் காப்பது அடிப்படை உரிமை என உச்சநீதிமன்றம் தெரிவித்து இருந்தது. அது தொடர்பான வழக்கு விசாரணையில் உள்ளதால், பல்வேறு பயன்பாட்டிற்கு தேவையான ஆதார் அனைத்திலும் இணைக்க வேண்டுமா என்பதற்காக பொதுமக்கள் கேள்வி எழுப்பினர். இதனால் வரும் குழப்பங்களை தவிர்பதற்கு, பல்வேறு பயன்பாட்டு திட்டங்களுக்காக ஆதார் எண்ணை இணைக்கும் கால அவகாசத்தையும் டிசம்பர் 31 வரை நீட்டித்தது மத்திய அரசு.

இந்நிலையில், வருமானவரி செலுத்துவதற்காக, பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டுமென மத்திய அரசு கொடுத்திருந்த கால அவகாசம் இன்றுடன் முடியும் தருவாயில், அதற்கான கால அவகாசத்தை டிசம்பர் 31 ஆம் தேதி வரை நீட்டித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Response