கோபத்தை அரசியல் வாதிகளிடம் காட்டுங்கள் பார்க்கலாம்! என சவால் விட்ட கமல்

kamil1

நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது, ஆர்த்தி மற்றும் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட சில போட்டியாளர்கள் சிறப்பு விருந்தினராக பங்கு பெற்றார்கள்.

அதில் ஜூலீயும் ஒருவர். ஜூலியை வரவேற்கும் போது மக்கள் மத்தியில் எந்த வரவேற்பும் இல்லை. இதனை கண்ட கமல், ” இந்த சின்ன பெண் மீது நீங்கள் காண்பிக்கும் கோபத்தை ஏன் அரசியல் வாதிகள் மீது காண்பியுங்களேன் என சொன்னார். அதாவது “குண்டர்” சட்டத்தில் உள்ளே இருக்க வேண்டியவர்கள் எல்லாம் வெளியில் ஜாலியாக உள்ளனர் என ஆவேசமாக தெரிவித்தார்.

இதிலிருந்து கமல் ஜூலிக்கு ஆதரவு தருகிறாரா அல்லது அரசியல் வாதியை எதிர்க்க தூண்டி விடுகிறாரா என நினைக்க தோன்றுகிறது. மேலும் கடந்த சில நாட்களாகவே அதாவது பிக் பாஸ் நிகழ்ச்சியில் களமிறங்கிய பிறகு, அரசியலை பற்றி அவ்வபோது சில கருத்துக்களை பேசி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Response