நிரம்புகிறது கௌரவப்பள்ளி அணை… ஓசூரில் 20 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

kauravappalli-dam-28-1503903637
கிருஷ்ணகிரியில் கௌரவப்பள்ளி அணையின் நீர்மட்டம் நிரம்பும் நிலையில் உள்ளதால் ஓசூரைச் சுற்றியுள்ள 20 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் பெங்களூருவிலும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில் நேற்று அங்கு விநாயகர் சிலையை கரைக்கச் சென்ற ஒருவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லபட்டார்.

தொடர் மழையின் காரணமாக, ஓசூர் அருகேயுள்ள கௌரவப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால், நீர்மட்டம் உயர்ந்து அணை நிரம்பும் நிலையில் உள்ளது. அவ்வாறு அணை நிரம்பிவிட்டால் உபரி நீர் திறந்துவிடப்படும். தென் பெண்ணை ஆற்றில் வெள்ளப் பெருக்கு அதிகரிக்கும். இந்நிலையில் மாவட்ட நிர்வாகம், ஓசூரைச் சுற்றியுள்ள 20 கிரமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், ஆற்றின் தரைப்பாலங்களை பொதுமக்கள் கடக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

Leave a Response