இந்திய அணிக்கு 218 ரன்கள் நிர்ணயம் செய்த இலங்கை அணி!

cri-1

இந்தியா-இலங்கை அணிகள் மோதும் 3-ஆவது ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்கு 218 ரன்களை இலக்காக இலங்கை அணி நிர்ணயித்துள்ளது.

பல்லேகேலே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய இலங்கை அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 217 ரன்கள் எடுத்தது.

இலங்கை அணி தரப்பில் அதிகபட்சமாக திரிமண்ணே 80 ரன்களும், சந்திமால் 36 ரன்களும் எடுத்தனர்.

bumrah

இந்திய அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய பும்ரா 5 விக்கெட்டுகளையும், பாண்டியா,கேதர் ஜாதவ், அக்சர் பட்டேல் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இப்போட்டியில் சிறப்பாக பந்துவீசிய பும்ரா முதல் முறையாக 5 விக்கெட் வீழ்த்தியுள்ளார்

Leave a Response