மதுசூதனன் இல்லத்திற்கு திடீர் வருகை தந்த துணை முதல்வர் !

madhu 2
தமிழகத்தில் தற்போது நிகழ்ந்து வரும் அரசியல் பரபரப்பு சூழ்நிலைக்கிடையில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று அதிமுக கட்சியின் மூத்த நிர்வாகியான மதுசூதனன் இல்லத்திற்கு திடீர் வருகை புரிந்தார்.

இங்கு மதுசூதனின் மனைவி ஜீவா அவர்களின் உடல் நலம் குறித்து ஓ.பன்னீர்செல்வம் கேட்டறிந்து அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
jiva
அதை தொடர்ந்து மதுசூதனுடன் ஓ.பன்னீர்செல்வம் சிறிது நேரம் ஆலோசனை நடத்தினார். இதில் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, ஜெ.சி.டி.பிரபாகரன், ஆர்.எஸ்.ராஜேஷ் ஆகியோர் உடனிருந்தார்.

நீண்ட இடைவெளியை கடந்து இரு அணிகள் இணைப்பிற்கு பிறகு கட்சியின் மூத்த நிர்வாகியான மதுசூதனை அவரது இல்லத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசுவது இதுவே முதல் முறையாகும்.

Leave a Response