பேரறிவாளன் பரோலில் செல்ல தமிழக அரசு உத்தரவு !

perari_2885120f_2885135f
பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு 26 ஆண்டுகளாக சிறையில்
அடைக்கப்பட்டிருக்கும் பேரறிவாளனுக்கு இன்று பரோல் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

இருபத்தி ஆறு ஆண்டுகளாக சிறையிலேயே தங்கள் வாழ்வைக் கழித்துவரும் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட நான்கு பேரையும் விடுவிக்க வேண்டும் என்று தமிழகம் முழுவதும் பல்வேறு அமைப்புகளின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக, கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் ராஜீவ் கொலை வழக்கில் குற்றவாளிகளை விடுதலை செய்வதற்கான தீர்மானத்தை அப்போதைய முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்தார்.

அந்த தீர்மானம் சட்டசபையிலும் நிறைவேற்றபட்டு மத்திய அரசுக்கு அனுப்பட்டது. ஆனால், மத்திய அரசு தங்கள் ஆலோசனையில்லாமல் யாரையும் விடுதலை செய்ய முடியாது என்று தெரிவித்து, நீதிமன்றத்திற்கு சென்று அவர்களின் விடுதலைக்கு முட்டுக்கட்டை போட்டுவிட்டது.

நால்வரின் விடுதலை குறித்த சீராய்வு மனு தற்போது உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

பேரரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும் என்று அவருடைய தாயார் அற்புதம்மாள் பல ஆண்டுகளாக சட்டப்போராட்டம் நடத்தி வருகிறார்.

இதனிடையே, ராஜிவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு ஒருமாத காலம் பரோல் வழங்கி அரசாணை வெளியிட்டு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Leave a Response