டி.ஐ.ஜி ரூபா கொடுத்த புகாருக்கு அமைச்சர் மறுப்பு!

balakisna

பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறைக்கு அருகில் உள்ள அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி வீட்டுக்கு சசிகலாவும், இளவரசியும் அடிக்கடி சென்று வந்ததாக சிறைத்துறை டி.ஐ.ஜியாக இருந்த ரூபா புகார் கூறி இருந்தார்.

இது குறித்து அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி தெரிவிக்கையில்:-

”எனது புகழை கெடுக்க சதி நடக்கிறது. எனது வீட்டில் இருந்து சசிகலாவுக்கு சாப்பாடு, மருந்து உள்ளிட்ட எந்த பொருட்களும் கொண்டு சென்று கொடுக்கவில்லை. அது போல அவர் எனது வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றார் என்று கூறப்படும் தகவலும் உண்மையில்லை. அவர் எனது வீட்டுக்கு வந்து செல்லவில்லை.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Response