Asin’s kollywood return:

கோலிவுட்டுக்கே போய் விட்டால் என்ன? வருந்தும் அசின்:

பாலிவுட்டில் செட்டிலான நடிகை அசின் மீண்டும் கோலிவுட்டுக்கே போய்விடலாமா என்று பலத்த யோசனையில் உள்ளாராம்.

நடிகை அசின் கோலிவுட்டில் கொடி கட்டிப் பறந்து கொண்டிருந்தார். அப்போது இயக்குனர் முருகதாஸ் சூர்யாவை வைத்து எடுத்த கஜினியை இந்தியில் ரீமேக் செய்தார். அசினையே இந்தி கஜினிக்கும் ஜோடியாக்கினார். அப்படி பாலிவுட் சென்ற அசின் அங்கேயே செட்டிலாகிவிட்டார். பாலிவுட்டின் நம்பர் 1 ஹீரோயின் நான் தான், நான் தான் முதன்முதலில் ரூ.100 கோடி வசூல் படத்தில் நடித்த நடிகை என்றெல்லாம் அவர் தெரிவித்தார்.

ஆனால் பாவம் அவர் பேச்சை யாரும் கேட்ட மாதிரியே இல்லை. இந்நிலையில் அக்ஷய் குமாருடன் அவர் நடித்த கிலாடி 786 படம் ரிலீஸாகி நல்ல வசூலை அள்ளியது. அந்நேரம் பார்த்து ஆமீர்கானின் தலாஷ் ரிலீஸான உடன் கிலாடி படுத்துவிட்டது. என்ன தான் முட்டி மோதினாலும் கோலிவுட்டில் இருந்த மாதிரி இங்கு இல்லையே என்று அவர் நினைக்கிறாராம்.

பாலிவுட் வந்து பென்சில் மாதிரி குச்சியாகி இத்தனை சாதனைகள் புரிந்தும் கேட்பார் இல்லையே பேசாமல் கோலிவுட்டுக்கே திரும்பிவிட்டால் என்ன என்று அவர் பலத்த யோசனையில் உள்ளாராம். அப்போ இன்னும் சில நாட்களில் அசினை தொடர்ந்து தமிழ் படங்களில் பார்க்கலாமோ என்ற கேள்வி எழுந்தாலும், கால்ஷீட் கேட்டு சென்ற தமிழ் தயாரிப்பாளர்களை  திருப்பி அனுப்பிய அவரை ஏற்குமா கோலிவுட்.