தினகரன் வேண்டாம் முதல்வர் தான் வேண்டும் எம்.எல்.ஏ, கள் அதிரடி !

muthal
தினகரன் நேற்று பல்வேறு பதவிகளுக்கான நிர்வாகிகளை அறிவித்திருந்தார். இதில் புரட்சி தலைவி அம்மா பேரவை இணைச் செயலராக ஸ்ரீபெரும்புத்தூர் எம்எல்ஏ பழனி, மாநில மகளிர் அணி இணை செயலராக பண்ரூட்டி எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வம் தேர்வாகி இருந்தனர். இவர்கள் இருவரும் இந்தப் பதவியை இன்று ஏற்க மறுத்து, டிடிவி தினகரன் வேண்டாம் என்றும் முதல்வர் எடப்பாடிக்கே எங்களுடைய ஆதரவு என்றும் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளனர்.

கடலூரில் சத்யா அளித்த பேட்டியில், ”தொகுதி வளர்ச்சிக்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான் முன்னுரிமை அளித்து வருகிறார். எனவே அவருக்கு கீழ் நான் செயல்பட விரும்புகிறோன். ஆதலால் மகளிர் அணி இணை செயலர் பதவி தேவையில்லை” என்றார்.

சென்னை விமான நிலையத்தில் பழனி கூறியதாவது:- ”தினகரன் அளித்த பதவி எனக்கு தேவையில்லை ஜெயலலிதா அளித்த எம்.எல்.ஏ., பதவியே எனக்கு போதும். தினகரன் அறிவித்த பதவிக்கும் தனக்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ., போஸ்சும் தனக்கு தினகரன் வழங்கிய பொறுப்பு வேண்டாம் என மறுத்துள்ளார். தொடர்து தினகரன் அணியை வேண்டாம் என்று எம்.எல்.ஏக்கள் தெரிவிப்பது அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Response