பதவி பறிபோகுமா? சசிகலாவை சந்தித்த அமைச்சர்களுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்!

madurai_high_court_600_1_17014
சில மாதங்களுக்கு முன் சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் இருக்கும்
அதிமுகவின் பொதுசெயலாளர் சசிகலாவை சந்தித்த 4 அமைச்சர்களுக்கும், இதனை கண்டிக்காத முதல்வருக்கும் ஐகோர்ட் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அந்த நோட்டிசில் கூறியுள்ளதாவது:-

மதுரை மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ., தாமரைக்கனி மகனும் அதிமுகவை சேர்ந்தவருமான ஆணழகன் என்பவர் மதுரை ஐகோர்ட் கிளையில் பொது நல வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவில்; தமிழக சட்டசபை அமைச்சர்களான செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், காமராஜ், செல்லூர் ராஜூ ஆகியோர் சிறையில் சசிகலாவை சந்தித்து ஆலோசனை கேட்டுள்ளனர். இது ரகசிய காப்பு பிரமாணத்திற்கு எதிரானதாகும். இதனால், அமைச்சர்களையும், அந்த அமைச்சர்களை கண்டிக்காத தமிழக முதல்வர் பழனிசாமியையும் தகுதியிழப்பு செய்ய வேண்டும் என கோரினார். இந்த மனுவை ஏற்று கொண்ட கோர்ட், விளக்கம் அளிக்குமாறு தமிழக முதல்வர் பழனிசாமி,மற்றும் அமைச்சர்கள் 4 பேர், சட்டசபை செயலர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

Leave a Response