அரவக்குறிச்சியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில், மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் விஜயலட்சுமி தலைமை வகித்தார். கல்வி இயக்க உதவித் திட்ட அலுவலர் ரவிச்சந்தர் துவக்கி வைத்தார். மன நல டாக்டர் பாரதி கார்த்திகா, டாக்டர்கள் கேசவன், வசந்தி மோகன்பாபு, சத்தியமூர்த்தி ஆகியோர் குழந்தைகளை பரிசோதனை செய்தனர். அதில் 241 பேருக்கு பரிசோதனை செய்து, மாற்றுத்திறன் மாணவர்களுக்கான அடையாள அட்டை, 13 பேருக்கும் அறுவை சிகிச்சைக்காக அடையாள அட்டை, இரண்டு பேருக்கு உதவி உபகரணங்கள் வழங்க மொத்தம் 15 பேரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். முகாம் ஏற்பாடுகளை, வட்டார வளமைய மேற்பார்வையாளர் சுதா, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுபா, மாரியம்மாள் ஆகியோர் கொண்ட குழு சிறப்பாக செய்தனர்.
மாற்றுத்திறனாளி குழ்ந்தைகளுக்கு இலவச மருத்துவ முகாம்!
previous article
கரூரில் இன்று புறா போட்டி துவங்கியது !