கும்பகோணம் பள்ளி தீ விபத்து 13 வது நினைவு தினம் இன்று !

kumbagonam
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் கடந்த 2004ம் ஆண்டு தனியார் பள்ளி ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 94 குழந்தைகள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். 30 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.நாட்டையே பெரும் சேகத்தில் ஆழ்த்தி, அனைவரின் நெஞ்சங்களையும் உலுக்கிய இந்த தீ விபத்து நடந்து இன்றுடன் 13 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. இருந்தும் கும்பகோணம் பகுதி மக்களின் மனங்களில் நீங்காத வலியாகவும், வடுவாகவும் அந்த துயர சம்பவம் நிலைபெற்றுள்ளது.

13 வது நினைவு நாளான இன்று (ஜூலை 16) தீ விபத்தில் உயிரிழந்த பிள்ளைகளின் படத்திற்கு, அவர்களின் பெற்றோர்கள் மற்றும் பொது மக்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தீ விபத்து நடந்த ஸ்ரீகிருஷ்ணா பள்ளி முன் பலியான 94 குழந்தைகளின் படங்கள் வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 5 மணியளவில், 94 குழந்தைகள் நினைவாக தீ விபத்து நடைபெற்ற பள்ளியில் இருந்து ஊர்வலமாக சென்று, மகாமக குளக்கரையில் மோட்ச தீபம் ஏற்றப்பட உள்ளது.

Leave a Response