நடிகை காஜல் அகர்வால் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் பிஸியாக நடித்து வருகிறார். இவர் திரையுலகில் அடியெடுத்து வைத்து பத்தாண்டுகள் ஆகின்றன. அவர் எப்போவும் போல எந்தவித மாற்றம் இல்லாமல் இன்றுவரை பிசியாக நடித்து வருகிறார். தற்போது தமிழில் ‘விவேகம்’, ‘மெர்சல்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கில் ‘நேனே ராஜூ நேனே மந்திரி’என்ற படதிலும் நடித்து வருகிறார்.
அவர் கூறுகையில் “தற்போது நான் சினிமாவில் பிசியாக நடித்து வருகிறேன். இந்நிலையில் என்னுடைய திருமணம் பற்றி நான் யோசிக்கவில்லை. அதேசமயம், கண்டிப்பாக நான் காதல் திருமணம்தான் செய்து கொள்வேன். எனக்கு பிடித்தமான ஒருவரை நான் சந்திக்கும்போது அவரையே காதலித்து திருமணம் செய்து கொள்வேன். நான் காதலிக்கும் நபர் நல்லவராக இருக்கவேண்டும் எந்த துறையை சார்ந்தவதாக இருந்தாலும் அவரையே திருமணம் செய்து கொள்வேன். அவரிடம் நான் அழகை எதிர்பார்க்கவில்லை; கண்டிப்பாக அவர் 6 அடி உயரத்திற்கு மேல் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்’’ என்றார் காஜல் அகர்வால்.