கோவையில் உள்ள வேளாண் பல்கலைக்கழகத்தில் ரூ.430 கோடியில் உயிரித்தொழில்நுட்ப மையம் (Biotech Park) அமைக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் விதி 110-இன் கீழ் முதல்வர் பழனிசாமி வேளாண்துறை அறிவிப்புகளை வெளியிட்டார். வேளாண்துறையில் காலியாக உள்ள 430 வேளாண் உதவிப்பணியாளர்கள் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்றும், கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் ரூ.430 கோடியில் உயிரித்தொழில்நுட்ப மையம் (Biotech Park) அமைக்கப்படும் என்பான உள்ளிட்ட அறிவிப்புகளை அவர் வெளியிட்டுள்ளார்.