பெண்களுக்கான பாதுகாப்பு அமைப்பு : முதலமைச்சரிடம் பேசிய நடிகை வரலட்சுமி!..

varalatchumi
நடிகர் சாரதக்குமார் மற்றும் ராதிகாவின் மகளும் நடிகையுமான வரலட்சுமி அவர்கள் பெண்கள் சமூகத்தில் பல இடங்களில் பாதிக்கப்படுகின்றனர். அவர்கள் பாலியல் பிரச்னை, திருமண பிரச்னையால் ஏற்படும் மனஅழுத்தம் போன்ற பிரச்னைகளால் பாதிக்கப்படுகின்றனர்.

அதனால் அதிகளவில் மகிலா நீதிமன்றம் (பெண்களுக்கான நீதிமன்றம்) தொடங்க வேண்டும். அப்போது தான் பெண்களுக்கு எதிரான நிலுவையில் உள்ள வழக்கை விரைவில் தீர்க்க முடியும்.

பெண்களின் பிரச்னையை தீர்க்கும் விதமாக தான் நான் தற்போது பெண்களுக்கான பாதுகாப்பு அமைப்பை தொடங்கியுள்ளேன். இதுகுறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து விளக்கினேன் என பேசியுள்ளார்.

Leave a Response