அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு ஊக்கத்தொகையும், நினைவு பரிசும் வழங்கிய ரஜினி ரசிகர்கள்…

சோளிங்கர் நகரில் உள்ள அரசு பள்ளிகளில் 2016-2017ம் ஆண்டு பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற 10ம் மற்றும் 12ம் வகுப்பு மாணவ, மாணவியர்களுக்கு ஊக்கத்தொகையும், நினைவு பரிசும் வேலூர் மாவட்ட தலைமை ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் சார்பாக சோளிங்கர் என்.ரவி அவர்கள் வழங்கினார். நிகழ்ச்சியில் மாணவர்களுடன் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

பெரும்பாலான இது போன்ற நிகழ்ச்சிகளில் மாணவர்கள் நின்று கொண்டும், பரிசு வழங்குபவர்கள் அமர்ந்து கொண்டும் இருப்பார்கள். ஆனால் இந்த நிகழ்ச்சியில் மாணவர்களை அமர வைத்து அவர்கள் மத்தியில் நின்று மகிழ்ந்தார் சோளிங்கர் என்.ரவி.

விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் வயது வித்தியாசமின்றி இருகரம் கூப்பி வணங்கி வரவேற்று மகிழ்ந்தார்.

ரஜினிகாந்த் அவர்கள் மாணவர்கள் மீது கொண்டுள்ள பற்றை மிகத்தெளிவாக விளக்கினார் சோளிங்கர் என்.ரவி. அப்பொழுது அவர் கூறியதாவது, “தலைவர் அவர்கள் படிப்பை பற்றி பேசும் போதெல்லாம் தான் படிக்கவில்லையே என்று ஏங்கியது உண்டு.” என்று கண்கலங்க கூறினார், அது போல ஒரு நாளும் இனி வரும் தலைமுறையினர் வருத்தப்பட கூடாது என்று அந்த மக்களிடம் கேட்டுக்கொண்டார் சோளிங்கர் என்.ரவி.
1

2

3

4

5

6

7

8

9

10

11

12

13

14

15

16

17

18

19

20

21

22

23

24

25

Leave a Response