இன்று தான் கடைசி நாள்…

anna-university
தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள் இன்றுடன் முடிவடைகிறது.

பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளிவந்ததைத் தொடர்ந்து மே 1-ஆம் தேதி முதல் பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. மே 1-ஆம் தேதி முதல் மே 31-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. பூர்த்தி செய்த விண்ணப்பத்தை ஜூன் 3-ஆம் தேதிக்குள் தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ அண்ணா பல்கலைக்கழகத்தில் சமர்பிக்க வேண்டும். இதுவரையில் சுமார் 1.50 லட்சம் பேர் வரை பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் 517 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. மொத்தம் 2 லட்சம் பொறியியல் படிப்புக்கான இடங்கள் உள்ளன. இந்த கல்லூரிகளுக்கான இடங்கள் அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெறும் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகிறது. இந்த கலந்தாய்வு ஒற்றைச் சாளர முறையில் நடைபெறும்.

Leave a Response