‘பாகுபலி’ வில்லன் ராணா அரசியல்வாதியா…

raanaa
“பாகுபலி-2” படத்திற்கு பிறகு பிரபாஸ்- அனுஷ்காவை போலவே அப்படத்தில் வில்லனாக நடித்த ராணாவும் இந்திய அளவில் பேசப்படும் பிரபலமான நடிகராகி விட்டார். அதோடு ஹீரோ-வில்லன் என இரண்டு விதமான கேரக்டரில் அவர் தற்போது நடித்து வருகிறார். அந்த வகையில், “பாகுபலி-2” படத்திற்கு பிறகு ராணா தமிழில் “மடைதிறந்து” என்ற படத்தில் நாயகனாக நடித்து வருகிறார்.

மேலும் கௌதம் மேனன் இயக்கும் “எனை நோக்கி பாயும் தோட்டா” படத்தில் ஒரு கேரக்டரில் நடிக்கிறார். அதேப்போல், தெலுங்கில் “நேனே ராஜூ நேனே மந்திரி” என்ற படத்திலும் நடித்து வரும் ராணா, இந்த படத்தை அடுத்து “தேஜா” என்றொரு படத்தில் அரசியல்வாதியாக நடிக்கிறார்.

படம் முழுக்க கதர் வேஷ்டி சட்டை அணிந்து நடிக்கும் இந்த படத்தில் ராணாவுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். இந்த படத்தை ராணாவின் தந்தையே தயாரிக்கிறார்.

Leave a Response