கள்ளக்காதல் மோகத்தில் கணவனின் ஆணுறுப்பை வெட்டிய மனைவி…

vettu
நாடு எங்கே சீறுகெட்டு போகிறது என்று நினைத்தால் கவலைத்தான் வருகிறது. கள்ளகாதல் மோகத்தினால் பலர் தன் வாழ்வை அழித்து கொள்கின்றனர். அதில் ஒரு சம்பவம் அரங்கேறியள்ளது.

அதாவது மேற்குவங்க மாநிலம் அசன்சோல் பகுதியை சேர்ந்த முகம்மது நவுசத்திற்கும், பிகார் மாநிலம் லக்ஷ்மிசராய் பகுதியை சேர்ந்த ருக்பானு என்ற பெண்ணுக்கும் 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. நவுசத் அங்குள்ள பிஸ்கட் பேக்டரியில் பணியாற்றி வருகிறார். திருமணமான ஒரு மாதத்திலேயே இருவருக்கும் சண்டை வரத்தொடங்கியது. அதன் பின்னர் ருக்பானுவிற்கு வேறு ஒரு ஆணுடன் தொடர்பு இருந்ததாக நவுசத்தின் பெற்றோர் கூறுகின்றனர்.

அவர்களின் குடும்ப வழக்கப்படி திருமணமான 40 நாட்களுக்கு பிறகு பெண்ணை பிறந்த வீட்டிற்கு கூட்டிச்சென்று திரும்ப கூட்டிவரவேண்டும். ஆனால் தனது வீட்டிற்கு சென்ற ருக்பானு திரும்ப வர மறுத்துவிட்டார். அதன்பின்னர் நவுசத் பேசி ரயிலில் அழைத்து வரும் போது ஜார்கண்ட் மாநிலம் தியோகர் மாவட்டம் மதுப்பூர் ரயில் நிலையத்தில் ருக்பானு மாயமானார்.

சில தினங்களுக்கு பிறகு ருக்பானு கணவரின் வீட்டிற்கு வந்துள்ளார். இந்த இடைப்பட்ட நாளில் பெற்றோருடன் தான் இருந்திருப்பார் என்று எண்ணியிருந்த நிலையில் அவர் வேறு ஒருவருடன் இருந்தது தெரியவந்தது. இந்நிலையில் சம்பவ தினத்தன்று ருக்பானு நன்கு தூங்கிக்கொண்டிருந்த நவுசத்தின் ஆணுறுப்பை ரேசர் கொண்டு அறுத்துவிட்டு வேறு ஒரு அறைக்கு சென்று படுத்துக்கொண்டுள்ளார்.

நவுசத் வலியில் கத்தவும் வீட்டில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்துள்ளனர். அதன் பின்னர் அங்கு வந்த ருக்பானுவிடம் என்ன நடந்தது என்று கேட்க தெரியவில்லை என்று கூறியிருக்கிறார். ஆனால் ருக்பானு எந்த பதட்டமும் இல்லாமல் இருப்பதை பார்த்த நவுசத்தின் குடும்பத்தினர் இந்த செயலை செய்தது ருக்பானு தான் கண்டறிந்தனர். இது குறித்து நவுசத் குடும்பத்தினர் காவல்துறையில் புகார் அளித்தனர். ஆனால் அதற்குள் ருக்பானு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். காவல்துறையினர் ருக்பானுவை தீவிரமாக தேடிவருகின்றனர்.

Leave a Response