ஆந்திராவில் வெயிளின் தாக்கத்தால் 100 பேர் பலி?

heat-main2
ஆந்திராவின் கிருஷ்ணா மாவட்டத்தில் 5 இடங்களில் வெப்பநிலை 47 டிகிரி செல்சியசிற்கும் மேலாக உள்ளது.
நேற்று ஒரே நாளில் மட்டும் 23 இடங்களில் வெயிலின் தாக்கம் 40 டிகிரியை விடவும் அதிகமாக இருந்துள்ளது. விஜயவாடாவில் 41.6 டிகிரியும், நெல்லூரில் 44 டிகிரியும் பதிவாகி உள்ளன.

கடந்த சில நாட்களாக ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் சுட்டெரித்து வரும் வெயிலுக்கு இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. ஆந்திராவில் மட்டும் 87 பேர் பலியாகி உள்ளனர். ஆந்திராவில் தற்போதுள்ள வெப்பநிலையே மே 23 வரை தொடரும் என வானிலை ஆய்வ மையம் தெரிவித்துள்ளது. இதனால் மக்கள் கடும் அச்சத்திற்கு ஆளாகி உள்ளனர்.

Leave a Response