போக்குவரத்து ஊழியர்கள் தொடர் வேலைநிறுத்தம்- புதுச்சேரி மக்கள் அவதி!

pudhuvai_bus

புதுச்சேரி அரசு போக்குவரத்து கழகம் சார்பாக 143 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்துகள் சென்னை, திருப்பதி, பெங்களூர், கடலூர், திருநெல்வேலி, நாகர்கோவில் உள்ளிட்ட இடங்களுக்கு இயக்கப்பட்டு வருகிறது. அரசு போக்குவரத்து கழகத்தில் 1050 ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். ஒப்பந்த ஊழியராக, அதாவது 200 பேருந்து நடத்துனர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு மாதம் 1ம் தேதி சம்பளம் வழங்கப்படும்.

ஆனால், இதுவரை அந்த சம்பளம் வழங்கப்படவில்லை. கடந்த சனிக்கிழமை முதலே வந்து ஒப்பந்த ஊழியராக இருக்கும் ஓட்டுநர்கள், வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். இவர்களுக்கு ஆதரவு தெரிவித்து நிரந்தர ஊழியராக இருப்போர்கள் போராட்டத்தில் குவித்திருக்கிறார்கள். இதன் காரணமாக அனைத்து பேருந்துகளும் போக்குவரத்து பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. புதுச்சேரி மட்டுமல்லாமல் காரைக்கால் மாவட்டதில் உள்ள போக்குவரத்து கழக ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு தங்களுடைய பேருந்துகளை பணிமனைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

go

கடந்த 3 நாட்களாக நடக்கும் இந்த போராட்டத்தின் காரணமாக புதுச்சேரியில் பயணிகளும், பொதுமக்களும் மிகுந்த பாதிப்புக்குள்ளாகியிருக்கிறார்கள். அதாவது உள்ளூர்களுக்கு புதுச்சேரி அரசு பேருந்துகளை தான் பொதுமக்கள் பெரிதும் பயன்படுத்தி வருகிறார்கள். 3 நாட்களாக நடக்கும் இந்த போராட்டத்தால் அரசு சார்பில் பேச்சுவார்த்தை நடத்த முன்வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது சம்பந்தமாக அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து என்ன எடுக்கலாம் என்பது குறித்து ஆலோசிப்பதற்காக ஊழியர்கள் அனைவரும் பணிமனை முன் திரண்டிருக்கிறார்கள். அரசு நிர்வாகம் பேச்சுவார்த்தைக்கு அழைக்கவி்ல்லை என்றால் தங்களின் போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என்ற முடிவில் உள்ளனர்.

Leave a Response