தலைப்பு பார்த்ததுமே கண்டுபிடிச்சு இருப்பிங்க நான் யார சொல்ல வரேன்னு. ஆமாங்க நம்ம சிவகர்த்திகேயனுக்கு தான் மலேசியாவில் ரசிகர் மன்றம் ஆரம்பிச்சு இருக்காங்க. சின்னத்திரையில் இருந்து சினிமாவிற்கு வந்து தற்போது முன்னணி நடிகர்களின் வரிசையில் இருப்பவர் இவர்.
இவர் ‘ரெமோ’ படத்தை தொடர்ந்து மோகன் ராஜா இயக்கும் ‘வேலைக்காரன்’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் நயன்தாரா நாயகியாக நடித்து வருகிறார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மலேசியாவில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு மலேசியாவில் ரசிகர் மன்றம் ஆரம்பித்துள்ளனர். ரசிகர் மன்ற உறுப்பினர் அழைப்பின் பேரில் சிவகார்த்திகேயன்மலேசியாவில் உள்ள தன்னுடைய ரசிகர் மன்றத்திற்கு சென்று அங்குள்ளரசிகர்களை சந்தித்துள்ளார். அதோடு அவர்களுடன் புகைப்படங்கள் எடுத்திருக்கிறார். தற்போது அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.