தமிழக சுற்றுலா பயணிகள் உயிரிழப்பு: ஹிமாச்சல்…..

My_Broken_Window_wallpaper
பிலாஸ்பூர் அருகே சுமார் 14 பேருடன் சென்ற சுற்றுலா வேன் திடீரென கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தலைநகர் டெல்லியில் இருந்து குலுமணாலிக்கு வாடகை வேன் மூலம் சுற்றுலா சென்றுள்ளனர். அப்போது, சிம்லாவுக்கு சுமார் 120கி.மீ தொலைவில் சண்டிகர் – குலுமணாலி இடையே பனிச்சறுக்கில் வேன் சிக்கி விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இவ்விபத்தில் மதுரையைச் சேர்ந்த ஜெயராமன், காயத்ரி மற்றும் குமார் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும், படுகாயம் அடைந்தவர்கள் சண்டிகர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Response