திருமண கொண்டாட்டத்தின் போது மாரடைப்பில் உயிரை விட்ட மணமகன்…

groom-dance-vadodara
குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள ரனோலி கிராமத்தில், சாகர் சோலங்கி என்பவருக்கு நேற்று திருமணம் நடைபெறுவதாக இருந்தது. திருமணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்ற நிலையில், திருமண கொண்டாட்டங்களில் ஒன்றான நடன நிகழ்ச்சி நேற்று முன் தினம் இரவு நடைபெற்றது.

இந்த நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சோலங்கி, ஒருவரின் தோளில் அமர்ந்து கொண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். அப்போது திடீரென சோலங்கி மயங்கி விழுந்து உயிரிழந்தார். அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்த காட்சி முழுவதும் வீடியோவாக படமெடுக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த காட்சி, சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Leave a Response