“விஜய் 61” படபிடிப்பில் நடந்த சுவாரஸ்யமான நிகழ்வு…

vijay-61-new
விஜய் ஒரு நல்ல உள்ளம் கொண்டவர் என்பது அனைவரும் அறிந்த விஷயம் அதை நிருபிக்கும் விதமாக இப்பொழுது அவர் நடித்து வரும் படபிடிப்பில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

அதாவது தற்போது அட்லியுடன் இணைந்து தன்னுடைய 61வது படம் சென்னையில் படமாக்கப்பட்டு வரும் இப்படத்திற்கான ஒரு பாடலை கவிஞர் விஜய் சமீபத்தில் எழுதி முடித்த கையோடு இளையதளபதி விஜய்யை பார்க்க சென்றுள்ளார்.

அப்போது அங்கு வேலை செய்து கொண்டிருந்த சிறுவன் படப்பிடிப்பு முடியவும் அங்கிருந்து கிளம்பியுள்ளான். ஆனால் அவர் புறப்படுவதற்கு முன்பாக அவனது கண்கள் கண்ணீரால் நனைந்திருப்பதை கவனித்த விஜய் அவனருகில் சென்று அழுதாயா என்று கேட்டுள்ளார்.

அதற்கு உங்கள் எல்லோரையும் விட்டு செல்கிறேன். அதனால் தான் என்று கூற விஜய் உடனே அட எப்ப வேண்டுமானாலும் வாங்க நண்பா என்று சிறுவனை கட்டிப்பிடித்து சமாதானம் செய்துள்ளார்.

மேலும், இது நம்ம குடும்பம். நீ எப்போது வேண்டுமானாலும், இங்கு வரலாம் போகலாம், என்று விஜய் கூறியிருப்பதாக கவிஞர் விஜய் தெரிவித்துள்ளார்.

Leave a Response