‘கபாலி’ படத்திற்கு பிறகு மீண்டு இணையும் தன்சிகா- கலையரசன்…!

uru
கலையரசனும், தன்ஷிகாவும் ‘உரு’ படம் மூலம் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளனர். ரஜினி நடிப்பில் உருவான ‘கபாலி’ படத்தில் கலையரசனும், தன்ஷிகாவும் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்குப்பின் நடிகர் கலையரசனும், நடிகை தன்ஷிகாவும் ‘உரு’ படம் மூலம் மீண்டும் இணைந்துள்ளனர். இந்தப் படம் திகில் படமாம். ஆனால், படத்தில் பேய்யெல்லாம் கிடையாதாம்.

கொடைக்கானலுக்கு செல்லும் ஒரு எழுத்தாளர் சந்திக்கும் பிரச்னைகள் தான், படத்தின் கதையாம். நடிகை தன்ஷிகா, இப்போதெல்லாம், நல்ல கதையம்சம் உள்ள படம் என்றால், அது, சிறிய வேடமாக இருந்தாலும், சற்றும் தயக்காமல் நடிக்க சம்மதித்து விடுகிறார். ‘உரு’ என்றால் உருவம் என்ற அர்த்தமாம்.

மேலும் உருவம் என்ற வார்த்தைக்கு பயம் என்ற பொருளும் உள்ளது. இந்த படத்தை பொறுத்தவரை, பயம் என்ற விஷயத்தை மையமாக வைத்து, படம் தயாராவதால், ‘உரு’ என, பெயர் வைத்துள்ளதாக படக்குழுவினர் கூறினர்.

Leave a Response